Monday, June 22, 2009

பிரிவு



மகிழ்ச்சி தந்த மழைதுளிகள் இன்று
வெறும் மழை நீராய் மட்டும் என்னை
நனைத்துசென்ற உன் பிரிவில்...
உனர்ந்தது உன் பிரிவை மட்டுமல்ல...
என்னை சுற்றும் உன் நினைவுகளையும் தான்...
- செந்தில் குமார் -

2 comments:

மயாதி said...

கவிதைகள் நன்றாக இருக்கின்றன !
இருந்தாலும் வார்த்தைகளின் ஒழுங்கமைப்பு சில இடங்களில் தவறி விட்ட மாதிரி இருக்கின்றன, அதையும் சரி செய்தால் மிகவும் ச்ப்பரகாக இருக்கும்.

உதாரணத்திற்குச் சொல்கிறேன்,
என் கவிதைகளின்
பிறப்பிடம் காண
ஆவல் கொண்டேன்....
உன் புன்னகை
வெளிப்படுத்தியது
ஒளிந்திருந்த
என் கவிதைகளை...

இது உங்களின் கவிதையை நான் வாசித்த போது இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் இருக்கும் என்று தோன்றியது.
எழுதுவது உங்கள் உரிமை, அதை நான் குறை சொல்லவில்லை , இது என் கருத்து மட்டுமே !

பிடிக்காவிட்டால் விட்டு விடுங்கள்.

தொடர்ந்தும் எழுதுங்கள் நல்ல கவிதைகளை.

Unknown said...

உங்கள் கருத்துகளுக்கு நன்றி மயாதி....
நான் கவிதை எழுதுவதிற்கு புதியவன்...
கடந்த இரு மாதமாக மட்டும் எழுதுகிரேன்...

உங்கள் கருத்துகளை கண்டிப்பாக எனக்கு தேவை....

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...

- செந்தில் குமார் -