Wednesday, December 23, 2009

என் காதல்!


இரவில் பிரிந்து விடும் நிழலலாய் அல்ல...
என்னில் கலந்து விட்ட நினைவுகளாய்...
என் காதல்!

- செந்தில் குமார் -

Thursday, November 5, 2009

உன் நினைவுகள்




உன் நினைவுகள்


இழந்துவிட்ட உன் அருகாமையினால்...
இன்று உன் நினைவுகள் மட்டும்,
என் கவிதைகளாக...

- செந்தில் குமார் -

Monday, October 19, 2009

வலியின் சுகம்...


உன் வார்தையில் உள்ள,
நிராகரிப்பிலும் உனர்ந்தேன்...
ஒரு வலி மிகுந்த சுகத்தை..!
- செந்தில் குமார் -

Saturday, October 3, 2009



மண் மீது விழுந்த மழைதுளிகள்
மண்வாசத்தையும்...
என் மீது விழுந்த மழைதுளிகள்
உன் வாசத்தையும் தந்ததால் உனர்ந்தேன்...
என்னில் பெய்த மழை நீ என்பதை..

- செந்தில் குமார் -

Tuesday, September 8, 2009



சில கணவுகளுகும்,

சில நினைவுகளுகும்,
இடையில் சிதைந்து கிடந்த
என் இதயத்தை,
உன் விழிப்பார்வையால்
ஒருமுகப்படுத்தினாய்...
உருவம் இன்றி கிடைந்த என்னை
உன் அன்பெனும் உளியால்,
உருவம் கொடுத்தாய்.
உருவம் கொடுத்தாய்...
உயிர் கொடுக்க மறந்தாய்...
இன்று உன் முன்
ஓர் கற்சிலையாய் நான்...
- செந்தில் குமார் -

Tuesday, July 21, 2009

கானல் நீர் கனவுகள்



கார்மேகமாய் சூழ்ந்திருந்த நீ
உன் பிரிவை பரிசளித்தால் உனர்ந்தேன்,
என் தனிமையின் வெப்பத்தை...
காலம் எனும் கானல்னீரில் கரைந்து விட்ட
உன் நினைவுகளை மீண்டும் பெற காத்திருக்கின்றேன்...
மற்றுமோற் மழைகாலத்திற்காக....
- செந்தில் குமார் -

Monday, June 22, 2009

பிரிவு



மகிழ்ச்சி தந்த மழைதுளிகள் இன்று
வெறும் மழை நீராய் மட்டும் என்னை
நனைத்துசென்ற உன் பிரிவில்...
உனர்ந்தது உன் பிரிவை மட்டுமல்ல...
என்னை சுற்றும் உன் நினைவுகளையும் தான்...
- செந்தில் குமார் -

Monday, June 15, 2009

புன்னகைகை பூவே...


என் கவிதைகளின் பிறப்பிடத்தை கண்டறிய
ஆவல் கொண்டேன்...
கண்டறிந்தேன்! உன் இதழ் பூக்கும்
புன்னகை
யில்,
ஒளிந்த்திருக்கு
ம் என் கவிதைகளை!!!

காதல் சுவடுகள்


காலம் விட்டு சென்ற
காலடி சுவடுகள்....
என் காதல் சுவடுகள்...

Tuesday, June 9, 2009

மண்வாசம்

நட்புக்காலம்


சிறகுகளும் சிலுவையாகிபோன
ஓர் இலையுதிர் காலத்தை,
வசந்தமாக மாற்றிய உன் நட்பில்....
என் உதிர்ந்த சிறகுகளில் வரைந்த
ஓவியத்தின் வண்ணங்களாய் மிளிர்கிறது
நம் நேசம்!
- செந்தில் குமார் -

காதல் வரம்...



என் இருபது வருட,
தவம் கலைத்த வரம்....
உன்மீது நான் கொண்ட காதல்!
- செந்தில் குமார் -

காதல் மொழி...



உன் விழிகள் பேசியதில்...

என் மொழிகள் மௌனமானது!
ஆம், இன்று உன்னிடம் கற்று கொண்டேன்,
காதலில் ஓர் புதிய மொழி...
மௌனம்!
****
என்ன செல்லி புரியவைபது தென்றலுக்கு...
நீ அடிக்கடி கலைத்து செல்வது,
என்னவள் கூந்தலை மட்டும் அல்ல...
என் மனதையும் தான்!.
- செந்தில் குமார் -

ஊமை காதல்



வார்த்தைகளால் பேச நினைத்த என்னை

உன் மௌனத்தால் சிறை வைத்தாய்.....
இன்று கவிதைகலால் பேச நினைகிறேன்
கண்ணி்ராய் வந்து என்னை சிறை வைக்கிறாய்...
- செந்தில் குமார் -

நினைவுகள்



கனவுகலாய் கலைந்து விடுவாய் என...
உறங்காமல் விழித்திருந்தேன்..- .
உன் நினைவுகளில்!!!
-செந்தில் குமார்-

Saturday, January 17, 2009

என் நினைவில் உறவாடும் இவள் நட்பு ...

உரிமையோடு பழகி
ஒருமையோடு பேசிய
நட்பு


கொண்டவன் ஆகப்போகிறவனை கூட

நல்லவனா? என

கண்டறிந்து வர சொன்ன

நட்பு


பார்த்ததே இல்லை

என்றாலும்

பரிட்சயம் நிறைந்த
நட்பு


தாயவள் குணமும்

சேயவள் முகமும்

தந்தது இவள்

நட்பு


இணையம் தந்த

ஈடில்லாத

நட்பு


இடிக்கு கூட

படியாது என்று

நினைத்த

நட்பு


இன்று

விளையாட்டை கூட
வினையாக எடுத்த

நட்பு


கண்ணாடி பாத்திரம்

கை நழுவியது போல் ஆன

நட்பு


இனி யார் ஒட்டவைத்தாலும்

இணையாத

நட்பு


காலமே ஒட்ட வைத்தாலும்

கற்பிழந்து போன

நட்பு


இவள் பிரிவால் பெருக்கெடுத்த

கண்ணீர் தந்த சுவை

உப்பு

இறுதி மூச்சு வரை

உறுதியாக என் நினைவில்

உறவாடும் இவள்

நட்பு ...