Sunday, November 14, 2010

நினைவுகளின் மிச்சம்...


உன்னில் தொலைத்து விட்ட என்னை

தேடிகொன்டு இருக்கிறேன்,
இன்று...
உன் கால்கொலுசில் இருந்து சிதறிய
முத்துகள் போல,
நீ சென்ற வழி எங்கும்,
சிதைந்து கிடக்கின்றன
என் நினைவுகளின் மிச்சம்...

- செந்தில் குமார் -

Tuesday, September 7, 2010

நட்பினால் உருவான நம் படிகடுகள்...


கனவுகளாய் கலைந்து சென்ற என் காதலும்
இன்று என்னை விட்டு தனியே...

காலத்தினால் என்னை சூழ்ந்து வந்த என்,
சுற்றங்க்ளும் அன்று என்னை விட்டு தனியே...

நம் நட்பிற்காக உன் தோள் கொடுத்த உன்,
தோள்கள் மட்டும் என்றும் என்னுடன்...

- செந்தில் குமார் -

Monday, August 23, 2010

காதல் ஓவியம்...

காதல் ஓவியம்...

உன் என்னங்களை, வர்ணங்களாய் மாற்றி..
வரைந்த ஓவியம், நம் காதல்...

- செந்தில் குமார் -

Monday, August 16, 2010

பயணம்...

வறன்ட பாலைவனத்தில் நடைந்து சென்ற என்னை,
என் கரம்பிடித்து
மலர்சோலைக்கு அழைத்து வந்ததாய்...
இன்று உன் விரல் பிடித்து நான்
பயனம் செய்த பாதை முடிந்தாலும்,
உன் நினைவுகளுடன் நான்
செய்யும் பயணம் என்றும் முடிவதில்லை...

- செந்தில் குமார் -

Wednesday, June 30, 2010

என் காதல்...


என் காதல்...

பறித்த மறு நொடி மரணம் என்றாலும்...
உன்புன்னகையால் உயிர்வாழ்வது...
இப்பூக்கள் மட்டுமல்ல.. என் காதலும்தான்...

- செந்தில் குமார் -

Thursday, May 6, 2010

என்னவள் ஸ்பரிசம்


என்னுள் விழுந்த் முதல் மழைத்துளி...
என்னை வீழ்த்திய முதல் பனித்துளி...
என்னவள் ஸ்பரிசம்...

-செந்தில் குமார்-

Wednesday, April 14, 2010

தேடல்கள்


தேடல்கள்

மலர்களின் தேசத்தில் பிறந்த நம் நேசம்
உன் பிரிவால், நீ உதிர்த்து சென்ற
ஒற்றை பூவென உலர்ந்து விட்டது,
இன்று என்னை விட்டு நீ சென்றாலும்,
உனக்கான என் தேடல்கள் மட்டும் தொடரும்,
முற்றுப்பெறாத இக் கவிதையைப் போல...

-செந்தில் குமார்-

Monday, March 22, 2010

அழகிய ரயில் பயனம்...


அழகிய ரயில் பயணம்...

ஓர் அழகிய இரவுநேர, ஜன்னல் ஓர
ரயில் பயணம்..
என்னவள் நினைவுகளை எடுத்துவந்து
என்னை நனைக்கும் மழைச்சாரல்....
மழைநேர விண்மீன்களாய்,
ஜன்னல் கம்பியில் உள்ள மழை குமிழிகள்..
சூழ வந்த இருளை அகற்றி மழைச்சாரலை
ரசிக்க உதவிய மின்ன்லுக்கு நடுவில்,
ஓர் பிறைமதி என்னை பின்தொடர்வதாய் உணர்ந்தேன்...
என் தோள்ச் சாய்ந்திருக்கும் ,
முழுமதியின் முகம்காண ஏங்கும் இந்த
பிறைமதியின் என்னம் புரியாமல்...

-செந்தில் குமார்-

Sunday, February 14, 2010

கல்லறை காதல்...


கல்லறை காதல்...

கல்லறைக்குள் சென்று உறங்கிய காதலும்
இன்று கண்விழித்துக் கொண்டது...
உன் மீது நான் கொண்ட காதலால்...!

-செந்தில் குமார்-

Wednesday, January 13, 2010

வலி...


முள் தைத்தது என்னவோ
அவள் பாதத்தில் தான்...
வலியை மட்டும் உனர்கின்றேன்...
என் இதயத்தில்...

- செந்தில் குமார் -

Friday, January 8, 2010

நினைவுகள் தேடும் கவிதைகள்...



கடல் அலைகள் வந்து எடுத்துச் சென்ற
உன் காலடி சுவடுகள் தேவையில்லை!
மலையருவிகள் விட்டு சென்ற
உன் வலையோசையும் தேவையில்லை!
உன் வாசம் எடுத்து வந்து என்
ஜன்னல் தட்டும் மழைசரலும்
இனி தேவையில்லை!
நீ சிந்திய புன்னகை மட்டும் போதும்,
உன் நினைவுகலோடு வாழும்...
என் கவிதைகளுக்கு...!

- செந்தில் குமார் -