Thursday, January 10, 2013

காதலின் புரிதல்...




காதலின் புரிதல்...

கோபம்...
அதிகாலை ஆதவன் கதிர் போல்,
சுட்டெரிக்கும் உந்தன் கோபம்...

பிரிவு...
நீ சென்ற பிறகும் விலக மறுக்கும் பிம்பமாய்,
உன் நினைவுகள்...

நேசம்...
கைபேசி அழைப்பை தூண்டித்த பிறகும்,
மனதில் தொடரும் உன் நினைவுகளின் தொடர்சியால்,
என் முகத்தில் தோன்றி மறையும் புன்னகை...

காதல்...
கோபம், பிரிவு, நேசம் இவற்றில் புரிந்தது,
எனக்கெனப் பிறந்த ஓர் அழகிய காதல் கவிதை,
நீ என்பதை!...


- செந்தில் குமார் -

No comments: