Saturday, January 17, 2009

என் நினைவில் உறவாடும் இவள் நட்பு ...

உரிமையோடு பழகி
ஒருமையோடு பேசிய
நட்பு


கொண்டவன் ஆகப்போகிறவனை கூட

நல்லவனா? என

கண்டறிந்து வர சொன்ன

நட்பு


பார்த்ததே இல்லை

என்றாலும்

பரிட்சயம் நிறைந்த
நட்பு


தாயவள் குணமும்

சேயவள் முகமும்

தந்தது இவள்

நட்பு


இணையம் தந்த

ஈடில்லாத

நட்பு


இடிக்கு கூட

படியாது என்று

நினைத்த

நட்பு


இன்று

விளையாட்டை கூட
வினையாக எடுத்த

நட்பு


கண்ணாடி பாத்திரம்

கை நழுவியது போல் ஆன

நட்பு


இனி யார் ஒட்டவைத்தாலும்

இணையாத

நட்பு


காலமே ஒட்ட வைத்தாலும்

கற்பிழந்து போன

நட்பு


இவள் பிரிவால் பெருக்கெடுத்த

கண்ணீர் தந்த சுவை

உப்பு

இறுதி மூச்சு வரை

உறுதியாக என் நினைவில்

உறவாடும் இவள்

நட்பு ...

4 comments:

Om Santhosh said...

romba romba nalla irukku

Om Santhosh said...

ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு

Unknown said...

thanks santhosh... thank for your comment

Unknown said...

Superb.